தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப் படுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல தலைவர் எஸ். மணிகண்டன் தலைமையில் பொதுச்செயலாளர் பி.முருகன், துணை பொதுச் செயலாளர் பி. கண்ணன், பொருளாளர் எம். அரும்பாலன், துணைத் தலைவர் ஏ.எஸ். நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் சிறப்பு தலைவர் ஜி.பாஸ்கரன் சிறப்புரை ஆற்றினார்.