districts

img

வேலூர், நெய்வேலியில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் பொது துறைகளை தனியார் மையமாக்கும் தேசிய பணமயமாக்கல்  திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் டி.முரளி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை சிஐடியு மாவட்ட துணைத்தலைவர்  எம்.காசி துவக்கி வைத்து பேசினார். மாநகர தொழிற்சங்க கன்வீனர் சி.ஞானசேகரன், மாவட்ட பொருளாளர்  எம்.கோவிந்தராஜ், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜூலி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.