கடலூர், நவ.30- சட்டத்திற்கு விரோதமாக ஆக்கிரமிப்பு அகற்றுவதாக கூறி சிஐடியு தலைவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடலூர் மஞ்சக்குப்பம் பழைய ஆட்சியர் அலுவலக சாலை மற்றும் மஞ்சக்குப்பம் மைதானத்தில் சுற்றிலும் 170-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற முயன்றனர். அப்போது கடைக்காரர்கள், தங்களுக்கு கடைகளை அகற்ற கால அவகாசம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதை ஏற்ற மாநக ராட்சி ஊழியர்கள் கடைகளை அகற்றா மல் சென்றனர். இதையடுத்து வியாழக் கிழமை (நவ.30) மாநகராட்சி ஊழியர்கள், ஆக்கிரமிப்பு கடைகளை காவல்துறையினர் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றினர். அப்போது அங்கிருந்த 60-க்கும் மேற்பட்ட தரை கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளையும் அகற்ற முயன்றனர். அப்போது சிஐடியு நடைபாதை வியா பாரிகள் சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் தராமல் கடைகளை அகற்றக் கூடாது, சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை மதிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுகிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவின் படி எந்த விதியையும் மாநகராட்சி அதிகாரிகள் பின்பற்றவில்லை என்றும் கூறினார். எதையும் கண்டுகொள்ளாமல் ஆக்கிர மிப்புகளை அகற்றினர். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த புது நகர் உதவி ஆய்வாளர் கதிரவனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, தரைக் கடை மற்றும் தள்ளுவண்டி கடை களை தவிர ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டது. சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், சிஐடியு சாலையோர வியா பாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சங்க மேஸ்வரன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் வி. சுப்பராயன், ஜெ.ராஜேஷ் கண்ணன், ஆர்.ஆளவந்தார், திருமுருகன், ஸ்டாலின், சிபிஎம் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.