திருவண்ணாமலை, அக்.19- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் பட்டு சேலைகளை, தடை செய்யப் பட்ட விசைத்தறியில் உற்பத்தி செய்பவர் களை கண்டறிந்து அந்த விசைத்தறி கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வியாழனன்று, ஆரணி நகரம் வந்த வாசி ரோடு சிவசக்தி நகர் உட்பிரிவு கணபதி நகரில் கைத்தறி இலாக்கா அதிகாரிகள் விசைத்தறிக்கூடத்தை ஆய்வு செய்ய முற்படும்போது, உடன் சென்ற கைத்தறி நெசவாளர் பாபுவை விசைத்தறி உரிமையாளர், அவரது ஆட்கள் ஒன்றிணைந்து தாக்கியுள்ளார்கள். இதனால் பலத்த காயத்துடன் ஆரணி அரசு மருத்துவமனை யில் பாபு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது சம்பந்த மாக காவல்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ள னர். இதுகுறித்து சிஐடியு மாவட்ட செயலாளர் இரா.பாரி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.