districts

img

ஜவுளிப்பூங்கா அமைக்க வலியுறுத்தி புதுச்சேரியில் சிஐடியு பிரச்சாரம்

புதுச்சேரி,பிப்.27-  பஞ்சாலைகளில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்க வலியுறுத்தி சிஐடியு பிரச்சார இயக்கம் புதுச்சேரியில் துவங்கியது.  புதுச்சேரியில் உள்ள பாரம்பரியமான  சுதேசி, பாரதி, ரோடியர் பஞ்சாலை களில் ஜவுளிப்பூங்கா அமைக்க வேண்டும்,  புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், ஏகாதிபத்திய நாடுகளின் வர்த்தக நலன்களுக்கு சேவையாற்றும் உலக வர்த்தக அமைப்புக்கு  சுதேசி பஞ்சாலையில் இடம் வழங்குவதை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும், திருபு வனை கூட்டுறவு நூற்பு ஆலையை இயக்க வேண்டும், பணி ஓய்வு பெற்றஆலை தொழி லாளிகளுக்கு கிராஜுவிட்டி பணத்தை உடனே வழங்க வேண்டும், ஜூலை 30 தியாகிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு சிஐடியு மில் தொழிலாளர் சங்கத் தலைவர் குண சேகரன் தலைமை தாங்கினார். புதுச்சேரி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ராமதாஸ் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர், சிஐடியு மாநிலத் தலைவர் பிரபுராஜ், துணைத் தலைவர் ராமசாமி, செயலாளர் சீனிவாசன் ஆகி யோர் பிரச்சாரத்தை வாழ்த்தி பேசினர். சங்க நிர்வாகிகள், ஆவணியப்பன்,  ராம லிங்கம்,ராமக் கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். புதுச்சேரி முழுவதும் நடைபெறும்  இந்த இயக்கம்  பிப்-29 வரை  நடைபெறுகிறது.