districts

img

சிஐடியு- தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வெற்றி தூய்மைப்பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு ரத்து

திருநெல்வேலி அக் 18- சிஐடியு மற்றும் தூய்மைப்பணித் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தால் நெல்லையில் தூய்மைப் பணியை ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று மாநகராட்சி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தது.  நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டி த்து சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். காத்திருப்பு போராட்டத்தையும் நடத்தினர். இந்நிலையில் புதன்கிழமை அன்று பாளை யங்கோட்டையில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் சிஐடியு நிர்வாகி களுடன் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்,  பேச்சுவார்த்தையில் நெல்லை மாநகர நல அலுவலர் மருத்துவர் சரோஜா, நெல்லை  தாசில்தார் ஜெயலட்சுமி, தொழிலாளர் துறை உதவி ஆணையர் பாலமுருகன், சிஐடியு ஊரக  வளர்ச்சி உள்ளாட்சித் துறை  ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.மோகன்,  மாவட்ட செயலாளர் மாரியப்பன், மாவட்டப் பொருளாளர் செல்லத்துரை, சிஐடியு மாநிலச் செயலாளர்  தங்கமோகன், சிஐடியு மாவட்ட இணைச்செயலாளர் சரவண பெருமாள், சிபிஎம் நெல்லை தாலுகாச் செயலாளர் துரை.நாராயணன், ,55 ஆவது வார்டு கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், சுய உதவிக்குழு தொழி லாளர்கள் சுய உதவிக்குழு தூய்மைத் தொழிலாளர்களாகவே  நீடிப்பார்கள்.ஒப்பந்தக்காரரிடம் வழங்க மாட்டோம் எந்த ஒப்பந்தத்திலும்  தொழிலாளர்கள் கையெழுத்திட வேண்டாம் என்று நெல்லை  மாநகராட்சி அதிகாரிகள் எழுதிக்கொடுத்த னர்.  இதனையடுத்து இன்று (அக்டோபர் 19) முதல் தூய்மைப்பணி தொழிலாளர்கள் பணிக்கு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.