சிஐடியு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் விருகம்பாக்கம் பகுதி சின்மயா நகரில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பிலால் ரகுமான் விழாவை தொடங்கி வைத்தார். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் சி.செங்கல்வராயன், பகுதிச் செயலாளர் இ.ரவி, தமுஎகச மாவட்டச் செயலாளர் பகத்சிங் கண்ணன், விருகம்பாக்கம் குடியிருப்போர் நல சங்க தலைவர் செ.அருமைநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.