மக்களை மத ரீதியாக பிளவுப்படுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிடக் கோரி புதனன்று (மார்ச் 13) சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், செயலாளர் தீ.சந்துரு, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்த்குமார், செயலாளர் ரா.பாரதி உள்ளிட்டோர் பேசினர்.