சென்னை, ஆக. 9 -
வேளச்சேரி ஏரிக்கரை யொட்டி உள்ள மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் புதனன்று (ஆக.9) மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலகத் தில் மனு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது. அப்போது வட்டாட்சியர் வரலட்சுமியி டம் மார்க்சிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
வேளச்சேரி ஏரியை யொட்டி உள்ள காந்தி நகர், சசி நகரில் 50 ஆண்டுகளுக் கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வர்களுக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, மின் இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு, அடிப் படை வசதிகள் செய்து தரப் பட்டுள்ளது. ஏரிக்கரை யோரம் வசிக்கும் இந்த மக்களை ஆக்கிரமிப்பாளர் கள் என வகைப்படுத்தி சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலக குடியிருப்பு, மசூதி காலனி, நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகள் வேளச் சேரி ஏரியின் உட்பகுதிக் குள்தான் உள்ளது.
காந்திநகர், சசி நகர் மக்கள் வசிக்கும் பகுதியா னது தண்ணீர் தேங்கு மிடமோ, தண்ணீர் செல்லும் பகுதியோ இல்லை. 2009 ஆம் ஆண்டு அந்த பகுதி மக்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், 25 ஆண்டுகளுக்கும் மேலாக (அன்றைய நில வரப்படி) குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்து பரிசீலிக்க உத்தரவிட் டுள்ளது.
பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில், காந்தி நகர், சசிநகர் குடியிருப்பு பகுதி சர்வே எண் 123/1 நீர் நிலை அமைப்பிலிருந்து குடியிருப்பு பகுதியாக மாற்றப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது. எனவே, அரசாணை 854ன்படி பட்டா வழங்கக் கோருவது நியாய மானது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித் துள்ளது.
உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி 14 ஆண்டுகளாகி றது. ஏரியின் மைய பகுதி யில் உள்ளவர்களுக்கு அரசு நில வகை மாற்றம் செய்து கொடுத்துள்ளது. அதே போன்று ஏரிக்கரையின் வெளிப்புறமுள்ள காந்தி நகர், சசி நகர் மக்களுக் கும் நில வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். ஏரி பாதுகாப்பு என்ற பெயரில் பொருளா தாரத்தில் பின் தங்கிய, ஏழை எளிய நடுத்தர மக்களின் வீடுகளை அகற்ற முயற் சிப்பது ஏற்புடையதல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் கே.வன ஜகுமரி, வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ். முகமதுரஃபீ, குடியிருப் போர் சங்க நிர்வாகிகள் தாஸ், தங்கராஜ், பிரபு, கார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.