சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக இளையோர் செஞ்சிலுவை சங்கம், பல்கலைக் கழக மகளிர் அமைப்பு மற்றும் கல்வியல் துறை இணைந்து குழந்தைகள் தின விழா விளையாட்டு போட்டிகளை நடத்தியது. இதில் அண்ணாமலை நகர் மற்றும் சிதம்பரத்திலுள்ள அரசு உதவிப் பெரும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா கல்வியல் துறை உயர் தொழில் நுட்ப அரங்கில் நடைபெற்றது. துறைத் தலைவர் பேரா. அம்பேத்கர், இளையோர் மண்டல ஒருகிங்கிணைப்பாளர் முனைவர். தி. ராஜ் பிரவின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.