ஆஷா நிவாஸ் சமூக சேவை நிறுவனம் சார்பில் கெல்லீஸ் அனைத்து பெண்கள் இல்லத்தில் குழந்தைகள் தின விழா மற்றும் குழந்தைகள் உரிமை தின விழா சிறப்பாக நடைபெற்றது. அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் ராஜ்குமார், மோகன் தாஸ் ஆகியோர் குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்து விளக்கினர். சமூதாய வளர்ச்சி அலுவலர் லில்லி ஜோஸ்பின் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர். குழந்தைகள் நாடாளுமன்ற அமைச்சர்கள் இதில் பாராட்டப்பட்டனர்.