districts

img

கொளத்தூர் மற்றும் மாதவரத்தில் தலைமைச் செயலாளர் ஆய்வு

நீர்வளத்துறையின் சார்பில் கொளத்தூர் மற்றும் மாதவரம் பகுதியல் உள்ள தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாயினை ரூ.91.36 கோடி மதிப்பில் அகலப்படுத்தி பணியினை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய் துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி வட்டார துணை ஆணையாளர்கள் கே.ஜெ.பிரவீன்குமார் (மத்தியம்) கட்டா ரவி தேஜா (வடக்கு) நீர்வளத்துறை கண்காணிப்புப் பொறியாளர் சி.பொதுப்பணி திலகம் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.