புதுச்சேரி,ஜூன் 9-
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு கடன் அனுமதி கடிதம் வழங்கினார்.
புதுச்சேரி நகர்ப்புற வளர்ச்சி முகமை மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் ஆகியவை சார்பில் சாலையோர வியா பாரிகளுக்கு சிறப்பு திட்டமான பிரதம மந்திரி சாலையோர வியா பாரிகள் ஆத்ம நிர்பர் நிதி திட்டத்தின் மூலம் புதுச்சேரி சாலையோர வியா பாரிகளுக்கான கடன் வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடை பெற்றது.
விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு சாலையோர வியா பாரிகளுக்கு ரூ.10ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என ரூ.3.09 கோடிக்கான கடன் அனுமதி கடிதங்களை வழங்கினார்.
குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய் ஜெ. சர வணன்குமார், சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, புதுச்சேரி நகர்ப்புற வளர்ச்சி முகமை இயக்கு நர் சக்திவேல், புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவகுமார், உழவர்கரை நக ராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமத் தலைவர் குமார் துரை மற்றும் பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.