districts

img

ஆவடி, தாம்பரத்தில் காவல் ஆணையரகங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, ஜன.1- புதிதாக தோற்றுவிக் கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களை முதலமைச்சர் ஸ்டாலின் சனிக்கிழமையன்று (ஜன.1)தொடங்கி வைத்தார். தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய இடங்களைத் தலை மையிடமாகக் கொண்டு தனித் தனி புதிய காவல் ஆணையரகங்கள் அமைக் கப்படும்” என சட்டப்பேர வையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி, சோழிங்க நல்லூரில் அமைக்கப்பட் டுள்ள தாம்பரம் காவல் ஆணையரகம் மற்றும் ஆவடி சிறப்பு காவல்படை 2 ம் அணி வளாகத்தில் அமை க்கப்பட்டுள்ள ஆவடி காவல்  ஆணையரகம் ஆகிய வற்றை முதலமைச்சர் தலைமைச் செயலகத்தி லிருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தாம்பரம் காவல் ஆணை யரகம், தாம்பரம் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய  இரண்டு காவல் மாவட்டங்க ளுடன் 20 காவல் நிலையங் களை உள்ளடக்கி செயல் படும். நிர்வாக வசதிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் மற்றும் மணிமங்கலம் காவல் நிலையங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், தாழம்பூர் மற்றும் கேளம்பாக்கம் காவல் நிலையங்கள் தாம் பரம் காவல் ஆணையரக எல்லையில் இணைக்கப் பட்டுள்ளது. ஆவடி காவல் ஆணைய ரகம், ஆவடி மற்றும் செங் குன்றம் ஆகிய இரண்டு காவல் மாவட்டங்களுடன் 25 காவல் நிலையங்களை உள்ளடக்கி செயல்படும். நிர்வாக வசதிக்காக திரு வள்ளூர் மாவட்டத்திலுள்ள வெள்ளவேடு, செவ்வாப் பேட்டை, சோழவரம், மீஞ்சூர்  மற்றும் காட்டூர் காவல் நிலை யங்கள் ஆவடி காவல் ஆணையரக எல்லையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமை ச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ. வேலு,  பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ.இறை யன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல் துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் அ.கா. விசுவநாதன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இதுவரை சிறப்பு அதிகாரிகளாக செயல்பட்டு வந்த எம்.ரவியை தாம்பரம் காவல்துறை ஆணையராக வும், சந்தீப் ராய் ரத் தோரை ஆவடி காவல் ஆணையராகவும் நியமித்து உள்துறை செயலாளர் எஸ்.பி.பிரபாகர் உத்தரவிட் டுள்ளார்.