சென்னை, டிச. 20 - 47 ஆவது சென்னை புத்தகக் காட்சி ஜன. 3 அன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கு கிறது. இதுதொடர்பாக தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ‘கவிதா’ சேது சொக்கலிங்கம், செயலாளர் ‘நாதம்கீதம்’ எஸ்.கே.முரு கன் ஆகியோர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: சென்னை புத்தக்காட்சி ஜன.4 அன்று தொடங்கி 21ந் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது. நந்த னம் ஒய்எம்சிஏ மைதானத் தில் நடைபெறும் இந்த புத்தகக் காட்சியை ஜன.3 அன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்க ளும் கலந்து கொள்கிறார் கள். புத்தகக் காட்சி விடு முறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். இந்த புத்தகக் காட்சியில் 20 லட்சம் வாசகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். வாசகர்கள் சிரமம் இன்றி வந்து செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்துள் ளோம். ஒவ்வொரு நாள் மாலை யிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர் களின் உரை வீச்சுக்கள் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.