districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையில் புதிய குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, மார்ச் 12- தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.172.72 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,520 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் அனை வருக்கும் வீட்டுவசதி என்ற திட்டத்தின் கீழ் சென்னையில் பெரியார் நகர் திட்ட ப்பகுதியில் பழுதடைந்த பழைய குடி யிருப்புகள் இடிக்கப்பட்டு, மறுகட்டு மான திட்டத்தின் கீழ் தரை மற்றும் 5  தளங்களுடன் ரூ.62 கோடியே 88 லட்சத்தில் 480 புதிய குடியிருப்புகள். மதுரை மாவட்டம், மஞ்சள்மேடு திட்டப் பகுதியில் தரை மற்றும் 3 தளங்களு டன் ரூ.37 கோடியே 25 லட்சத்தில் 320 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப் பட்டுள்ளன. புதிதாக கட்டப்பட்டுள்ள குடியி ருப்புகளை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இப்புதிய குடியிருப்புகள், ஒவ் வொன்றும் தலா 400 சதுரஅடி பரப்பள வுடன், ஒரு பல்நோக்குஅறை, படுக்கை அறை, சமையல் அறைமற்றும் கழி வறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட் டுள்ளன. மேலும்,அனைத்து குடி யிருப்பு வளாகங்களும், சாலை வசதி, குடிநீர் வசதி,கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி களுடன் அமைக்கப்பட்டுள்ளன. 27,260 குடியிருப்புகள்  திமுக அரசு பொறுப்பேற்ற திலிருந்து இதுவரை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்சார்பில் 88 திட்டப் பகுதிகளில் ரூ.3,046.32 கோடி யில் கட்டப்பட்ட27,260 அடுக்குமாடி குடி யிருப்புகள்வீடற்ற ஏழை, எளிய மக்களு க்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்  சென்னை மாவட்டம், ஜாபர்கான் பேட்டையில் ரூ.48 கோடியே 70 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 120 மத்திய வருவாய்ப் பிரிவு அடுக்குமாடி குடி யிருப்புகளையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறு வனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய செல்பேசி அறிமுகம் 

சென்னை, மார்ச் 10-  உயர் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டாக கடந்த ஆண்டு பல்வேறு சந்தைப் பிரிவுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் வெற்றி யையும் ஐக்யூஓஓ நிறு வனம் பெற்றுள்ளது.  இதன் ஐக்யூஓஓ இசட்7 புரோ மற்றும் இசட்7 ஆகியவை கடந்த ஆண்டில் நுகர்வோரால் மிகவும் விரும்பப்பட்ட ஸ்மார்ட்போன்களாக உள்ளன என்ற அந்நிறு வனம் கூறியுள்ளது. சிறப்பான செயல்திறன், வடி வமைப்பு மற்றும் கேமரா ஆகியவற்றின் காரண மாக இவை மற்ற ஸ்மார்ட்போன்களில் இருந்து தனித்து நிற்பதாக வும் தற்போது இந்த வரி சையில் புதிதாக ஐக்யூஓஓ இசட்9 மாடலை மார்ச் 12-ந்தேதி அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அந்நிறுவனம் அறி வித்துள்ளது.

மக்கள் நீதிமன்றத்தில் 339 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சிபுரம், மார்ச்.10 - ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 339 வழக்குகள் சமரசம் செய்து வைக்கப்பட்டு ரூ.10.43 கோடி தீர்வுத்தொகையாக வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்டார சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் (மார்ச்.10) சனிக்கிழமையன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ப.உ.செம்மல் தலைமை வகித்து மக்கள் நீதிமன்றத்தை தொடக்கி வைத்து பேசினார். சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும்,நீதிபதியுமான கே.அருண்சபாபதி, கூடுதல் சார்பு நீதிபதி பி.திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அம்பத்தூரில் ரூ.20 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்

சென்னை, மார்ச் 10- அம்பத்தூரில் மெத்த பெட்டமைன் என்ற போதை பொருள் விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அம்பத்தூர் பானு நகர் பகுதியில் அம்பத்தூர் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி செய்த போது, கார் டிக்கியில் 200 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்தவர்களிடம் விசா ரணை நடத்திய போது, அவர்கள் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த பாபு, ரமேஷ் என்பதும், பெங்களூ ருரில் இருந்து கடத்தி வந்து சிறுசிறு பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்து வதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரை யும் காவல் துறையினர் கைது செய்து, போதைப் பொருள் மற்றும் காரை பறி முதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மெத்த பெட்டமைனின் மதிப்பு 20 லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில்  தேர்தலை கண்காணிக்க 192 குழுக்கள்

சென்னை, மார்ச் 10- சென்னை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ எடுக்கும் குழு, கணக்கியல் குழு ஆகிய வற்றிற்கு தலா 48 என 192 குழுக்கள் அமைக்க ப்பட்டு உள்ளன. இவற்றில் 496 பேர் பணிய மர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள், ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறை களை மாநகராட்சி கூடுதல் ஆணையர், மாவட்ட தேர்தல் கூடுதல் அலுவலருமான லலிதா விளக்கினர். தேர்தலில் உரிய ஆவணங்கள் இல்லா மல் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து  வரப்பட்டால், உடனடியாக தகவல் தெரி விக்க இஎஸ்எம்எஸ், என்ற இணையபதிவு தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு வாகனங்களிலும் புதிதாக, ‘கண்காணிப்பு கேமரா’ பொருத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக, வீடியோ பதிவு செய்பவருடன் வாகனங்களில் உள்ள கேமரா வில் பதிவாவதை, கண்காணிப்பு அறையில் இருந்து கண்காணிக்க முடியும். பணியில் ஈடுபடுவோருக்கு தேர்தல் விதி முறைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், சோதனையில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலூரில்  187 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை

கடலூர், மார்ச் 10- மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடலூர் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் கடலூர் மக்களவைத் தொகுதி யில் 6 சட்டமன்ற தொகுதிகள், சிதம்பரம் தொகுதியில் 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 2302 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 11 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்ட மானது என்றும் 187 இடங்கள் பதட்டம் நிறைந்தவை என்றும் கண்டறியப் பட்டுள்ளது. தேர்தல் பணிகளை கண்காணிக்கும் வகையில் 63 பறக்கும் படை குழுக்களில் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மண்டல அலுவலர்கள் தலைமையில் 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் பணியில் ஈடுபடவுள்ளனர். இதனைத் தொடர்ந்து நோடல் அலுவலர்களாக துணை ஆட்சியர் நிலையில் 27 பேர் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடவுள்ளனர்.

விக்கிரவாண்டி -கும்பகோணம் சாலை பணியை விரைந்து முடித்திடுக வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தல்

விழுப்புரம், மார்ச் 10- நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலைப் பணியை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விழுப்புரம் வட்ட 16 -வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை கோலியனூரில் நடைபெற்றது. ஆர்.முதலி வீரன் (எ) மணிகண்டன் தலைமை தாங்கினார். தமுஎகச மாவட்டச் செய லாளர் மதுசூதனன் வரவேற்றார். வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் எஸ்.பிரகாஷ் துவக்கி வைத்தார். மாநிலச் செய லாளர் சிங்காரவேலன் சிறப்புரை யாற்றினார். மாவட்டச் செய லாளர் எஸ்.அறிவழகன் நிறைவுரை யாற்றினார்.  முன்னதாக வாலிபர் சங்க வட்டச் செயலாளர் கே.தேவநாதன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, சிபிஎம் வட்டச் செயலாளர் ஆர். கண்ணப்பன், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்டத் தலை வா் கே.அம்பிகாபதி, எம்.சுந்தர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  காலிப் பணியிடங்களை டிஎன்பிசி குரூப்-4 தேர்வு மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும் விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பணி களை விரைந்து முடித்து நாளும் அதிகரிக்கும் சாலை விபத்து களை தடுக்க வேண்டும். போதைப் பொருள் விற்பனையை தடுத்து இளைஞர்களின் வாழ்வை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தலைவராக யு.மதன்ராஜ், செயலாளராக எம்.ஜீவானந்தம், பொருளாளராக அஜய் தேர்வு செய்யப்பட்டனர்.

சோக்காடி பட்டியலின மக்களுக்கு  தொகுப்பு வீடுகளை வழங்குக அதிகாரிகளிடம் சிபிஎம் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, மார்ச் 10-  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சோக்காடி மற்றும் காவகவுண்டன் கொட்டாய் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இருளர் இன குடும்பங்களுக்கு தொகுப்புவீடுகள் வழங்க வேணடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  பர்கூர் வட்டத்தில் சூலா மலை பகுதி யில் வாழ்ந்து வரும் பழங்குடி இருளர் இன மக்களுக்கு சாதிச் சான்று (எஸ்டி), வாக்காளர், ஆதார், குடும்ப அட்டைகள், வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடு, 100 நாள் வேலைக்கான அட்டை வழங்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.  பட்டா கேட்டு மனு கொடுத்து பல மாதங்களாக காத்திருக்கும் சோக்காடி பட்டியலின மக்களுக்கு நில அளவீடு பட்டா வழங்காமல் வஞ்சித்து இழுத்தடித்து வருவதால் மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எந்தவித அடையாளும் இல்லாமல் சூலமலை தென்னந்தோப்புகளில் 70 ஆண்டுகளுக்கும் கொத்தடிமைகள் போல் வாழ்ந்து வரும் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று உடனடியாக வழங்க வலியுறுத்தி  மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியரிடம் உள்ளிட்டோரிடம் 4ஆவது முறையாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவருமான பி. டில்லி பாபு தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ்,சாம்ராஜ் ஆகியோர் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

செயின்ட் பீட்டர் மருத்துவமனையில்  மார்பக புற்றுநோய் சிறப்பு பிரிவு

செயின்ட் பீட்டர் மருத்துவமனையில்  மார்பக புற்றுநோய் சிறப்பு பிரிவு கிருஷ்ணகிரி,மார்ச் 10- ஓசூர் செயின்ட் பீட்டர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மகளிருக்கு சிறப்பு மருத்துவம் அளிக்கும் வகை யில் மார்பக புற்றுநோய் கண்டறியும் மெமோகிராம், ஃப்ளூ ரோஸ்கோப்பி உள்ளிட்ட நவீன மருத்துவ உபகரணங்களை உள்ளடக்கிய சிறப்பு மருத்துவ பிரிவை ஓசூர் மாநகராட்சி மருத்துவ அலுவலர் பிரபாகர் துவக்கி வைத்தார். ஓசூர் மண்டல தொழிலாளர் நல மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கீதா,தனியார் நிறுவன மனிதவள மேலாளர் கௌரி பங்கேற்றனர். கல்லூரி மருத்துவ மனை இயக்குநர் மருத்துவர் ராஜா முத்தையா வர வேற்றார். பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்று நோய் அதிகரித்து வருகிறது. மார்பகத்தில் ஏற்படக்கூடிய கட்டி, வலி போன்ற அறிகுறிகளை உடனடியாக மகளிர் நல மருத்து வர்களை அணுக வேண்டும்.  மார்பக புற்றுநோய் கண்ட றியும் சுத்தமான அனைத்து பரிசோதனைகளும் நமது மருத்துவமனையிலேயே செய்து கொள்ள முடியும்.  மேலும், இம் மருத்துவமனையில் மருத்துவர் முத்து லட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் மூலம் முதல் இரண்டு பிரசவங்களுக்கு இலவச மருத்துவம் அளிக்கப்பட்டு வரு கிறது, பொதுமக்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள லாம் என்று முதல்வர் சோமசேகர், மருத்துவ கண்காணிப்பா ளர் மருத்துவர் வாசுதேவா,இருப்பிட மருத்துவர் பார்வதி ஆகியோர் இந்த தகவலை தெரிவித்தனர்.