திருவள்ளூர், ஜன.30- கிராம சபையில் கேள்வி கேட்கும் இளைஞர்களை மிரட்டும் காவல்துறை அதிகாரி கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி கள் வலியுறுத்தியுள்ளனர். ஜன 26 குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்களும் நடைபெற்றன. அதில் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாராட்சி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். முந்தைய கூட்டங்களில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் என்னவானது அதையெல்லாம் நிறைவேற்றப்பட்டனவா, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா என கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை கேட்ட ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் அப்பகுதி இளைஞர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அதற்கும் அந்த இளை ஞர்கள் பொறுமையாக பதில் அளித்துள்ளனர். ஆனால் அக்கூட்டத்திலிருந்த எல்லாபுரம் ஒன்றிய மண்டல பிடிஒ பாலாஜி கூட்டம் முடிந்து விட்டது நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாது. அனைவரும் கலந்து செல்லுமாறு கூறியுள்ளார். அதைக் கேட்ட இளைஞர்கள் கூட்டத்திற்கு பெரும்பாலான மக்கள் பங்கேற்கவில்லை, வரவு, செலவு கணக்கு, மக்கள் நல திட்டங்கள் குறித்த எந்த ஒரு விவாதமும் நடத்தாமல் கூட்டம் முடிந்து விட்டது, கலைந்து செல்லு மாறு உத்திரவிடுவது எந்த வகை யில் நியாயம் என இளைஞர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்வி களை பொறுத்துக் கொள்ள முடி யாத மண்டல பிடிஒ பாலாஜி, காவல்துறையை அழைத்து கூட்டத்தை கலைக்கு மாறும், கூட்டத்தில் கலந்து கொண்ட வர்களிடம் கையொப்பம் வாங்கு மாறும் வற்புறுத்தினர். இதையறிந்த இளைஞர்கள் கையெழுத்திடும் நபர்களை தடுக்க முயன்ற போது ஊராட்சியின் தீர்மான புத்தகத்தை கிழிக்க பார்க்கிறார்கள் என்று பொய்யான புகாரை அவர்கள் மீது சுமத்தி இளைஞர்களை தாக்கி கைது செய்ய முற்பட்டதோடு, இளைஞர்களை தகாத வார்த்தை களில் பேசியதாக கூறப்படுகிறது.
ஊத்துக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஏழு மலை, உதவி ஆய்வாளர் பிரபா கரன் ஆகிய இருவரும் இளைஞர் களை நோக்கி, ‘‘நீங்க எல்லாம் ஏன்டா இந்த கூட்டத்துக்கு வரீங்க உங்களுக்கெல்லாம் இங்கு என்ன வேலை.கேள்வி எல்லாம் நீங்க எப்படி கேட்பீங்க அதை வார்டு உறுப்பினர்கள் தான் கேட்கணும் அவங்களை வர சொல்லுங்கள்’’ என்று ஒருமையில் பேசியுள்ளனர். உங்களை நிம்மதியாக தூங்க விடமாட்டோம், உங்க மேல முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்), போட்டே தீர்வோம் என பிடிஓ பாலாஜி உட்பட சிலர் மிரட்டினர். இதை அறிந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஊத்துக்கோட்டை பகுதி செயலாளர் சிவனேசன் தலைமையில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கலையரசன், மாவட்ட செய லாளர் டி.மதன் ஆகியோர் சந்தித்து பேசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காவல்துறை தலைமை இயக்கு நர்ஆகியோரை சந்தித்து முறை யிட திட்டமிட்டுள்ளனர். ஊராட்சியின் வளர்ச்சிக்காக கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி இளைஞர்கள் மீது வன்மத்தோடு பொய் வழக்கு கொடுத்த எல்லாபுரம் ஒன்றிய மண்டல பிடிஒ பாலாஜி மற்றும் இளை ஞர்களை அத்துமீறி தாக்கிய, பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்காத ஊத்துக்கோட்டை சி 1-காவல் நிலைய அதிகாரிகள் மீது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.