சென்னை, அக்.21- சென்னை டி.எம்.எஸ் அருகே சாலை விபத்தில் சிக்கியவருக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி செய்துள்ளார். வெள்ளியன்று (அக்.21) அண்ணா சாலை, டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டிருந்த சூளை மேட்டை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சாலை யில் எதிர்பாரதவிதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்ட நிலை யில், அவ்வழியே தலைமைச் செயலகத்தி லிருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்விபத்தினை கண்டு உடனடியாக வாகனத்தை (கான்வாய்) நிறுத்தி, இறங்கி சென்று, காய மடைந்தவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவலர் ஒருவருடன் அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலனை தொடர்பு கொண்டு, உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த அருள்ராஜூக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவது உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.