சிதம்பரம், ஜூலை 24- திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கடந்த 21-ஆம் தேதி மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவி எஸ்.பிரகதா 9 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளியில் வீனஸ் கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தாளாளர் வீனஸ் குமார் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்வில் பள்ளியின் முதல்வர் ரூபியால் ராணி, துணை முதல்வர் நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் போனிக்கலா மற்றும் உடற்கல்வி இயக்குநர் பிரபாகர் உடற்கல்வி ஆசிரியர்கள் உமா, ரஞ்சித் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.