districts

img

சிதம்பரம் பல்கலை. மாணவர்கள் போராட்டம்

சிதம்பரம், ஜூலை 24-

    மணிப்பூர் பாலியல் வன்கொடுமை சம்ப வத்தை கண்டித்து சிதம்பரம், அண்ணா மலைப் பல்கலைக்கழக மாண வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்து பல்கலைக்கழக மாண வர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த ஒன்று கூடினர்.

    அப்போது காவல்துறை யினர் அனுமதி  மறுத்ததால் பூமா கோவில் அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், மணிப்பூர் சம்பவத்தை  வேடிக்கை பார்த்த மாநில, ஒன்றிய பாஜக அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.