districts

img

வெட்டிவேர் விவசாயத்தில் அசத்தும் சிதம்பரம் விவசாயிகள்

சிதம்பரம்,மே 11- சிதம்பரம் சுற்றுவட்டப் பகுதியில் மானாவாரி நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள் வெட்டிவேர் விவசாயம் செய்து அசத்துகின்றனர். சிதம்பரம் அருகே புதுச்சத்திரம், கொத்தட்டை, பெரியப்பட்டு  உள்ளிட்ட கிராம பகுதிகளில்  உள்ள  விளைநிலங்களில்  நிலத்தடி மண்  மணல் பாங்கான இயற்கையாகவே அமைந்துள்ளது.   இந்த மண்ணில் விவசாயிகள்  ஆண்டாண்டு காலமாக  சவுக்கை,  தைலம் மரம், கம்பு, சோளம்,  வெள்ளரி,பாகற்காய் உள்ளிட்ட மாணாவரி பயிர்களை பயிர் செய்து  வந்தனர்.  இந்த நிலையில்  இந்த  பயிர்களை  விளைவைப்பதில் விவசாயி களுக்கு பராமரிப்பு உள்ளிட்ட அதிக  செலவு ஆவதாலும் சிரமம் ஏற்பட்டு வந்தது.  இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு  இந்த பகுதியில் வெட்டிவேர் விவசாயம்  அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வெட்டிவேர் அழகு சாதனப் பொருட்கள்,  வாசனை திரவியங்கள்,  சாமி சிலைகளுக்கு மாலையாக அணிவிக்கவும்,  அதேபோல்  வீட்டின்  வாசற்படியில் வாசனைக்காக தொங்க விடுகிறார்கள். வெட்டிவேர் மூலம் சோப்பு உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்கள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. வெட்டி வேர் வாசம்மருத்துவ குணமும் மகத்து வமும் நிறைந்தது வெட்டி வேரை போட்டு தண்ணீர் குடித்தால் எண்ணற்ற நோய்கள் குணமாகும். நீர் கடுப்பு, காய்ச்சல், சோர்வு, தோல்  நோய்கள், மன அழுத்தம் போன்ற  பிரச்சனைகள் தீரும் என சித்தமருத்து வம் சொல்வதால் இதனை சிதம்பரம்  பகுதியில்  பெரும்பாலான விவசாயி கள் பயிரிட்டு வருகின்றனர். இதில் விளைநிலம் வைத்திருப்ப வர்கள்  வெட்டிவேர் விவசாயத்திற்கு அவர்களின் நிலத்தை மொத்தமாக ஆண்டுக்கு ரூ 25 ஆயிரத்திற்கு சிலர் குத்தகைக்கு விட்டு விடுகிறார்கள்.  இதில் புதுச்சத்திரம், கொத்தட்டை, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட சிதம்பரம்  சுற்றுவட்டப்பகுதிகளில் சில விவசாயிகள் வெட்டிவேர் விவசாயம்  செய்து அசத்தி வருகிறார்கள்.  இந்த  வெட்டிவேர்  பத்து மாத  பயிர் ஆகும்.   இதனை  விவசாயிகள் பராமரித்து தற்போது நல்ல விலைக்கு விற்பதாக வும்  கூறுகின்றனர்.  இது குறித்து  தமிழ்நாடு விவசாயிகள் சங்க பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளரும், அப்பகுதி விவசாயியுமான ப.கொளஞ்சியப்பன் கூறுகையில், சவுக்கு, தைலம் உள் ளிட்ட மரங்களை இந்த மண்ணில்  விவசாயம் செய்தால்  3 ஆண்டு முதல்  4 ஆண்டு காலம்  அதனை பராமறித்து  அறுவடை செய்வது சிரமமாக  இருந்தது.  எனவே தற்போது இந்த பகுதியில் வெட்டிவேர் விவசாயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதனை விவசாயிகள் சிலர் பயிரிட்டு வருகின்றனர். மானாவாரி நிலங்களில் குறைந்த செலவில் பயிரிட வெட்டிவேர் சிறந்த மாற்றுப் பயிராக இருக்கும். ஆனால், இந்தப் பயிர்களுக்கு அதிகளவு தண்ணீர் தேவை  தற்போது ஒரு டன்  வெட்டி வேர்  ரூ.1.50 லட்சம் வரை விற்பனை  ஆகிறது. சிதம்பரம், பரங்கிப்பேட்டை,  ஆலப்பாக்கம், பெரியப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப் படுகிறது. ஒரு ஏக்கருக்கு 2 டன் வரை  வெட்டி வேர் கிடைக்கிறது. இது விவசாயிகளுக்கு  நல்ல லாபத்தை தருகிறது. இதில் வெட்டிவேரை நடவுசெய்து 3 மாதத்திற்கு  களை எடுத்தல் மற்றும் தண்ணி ஊற்றுதல் என்று பராமரிப்பு  செலவுதான். இது நன்கு வளர்வ தற்கு கோழி சாணத்தை போட்டு தண்ணீர் ஊற்றுவது தான் அதன் பிறகு பராமரிப்பு  செலவுகள் ஏதும் இல்லை.  நன்கு வளர்ந்து விட்டால் அதனை  அறுவடை  செய்யும் போது     வேரை வெட்டி எடுக்கும் கூலிதான்  பிரதான செலவு.  இதனை தமிழகத் தின் பல்வேறு பகுதிகளுக்கும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்க ளில் உள்ள வாசனை திரவியம், நறு மண பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பட்டு வருகிறது. அதேபோல் கோயிலுக்கு மாலை கட்டுவதற்கும் மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். ஆனால் கோழி சாணத்தை வயலில் போட்ட பிறகு ஒரு வாரத்திற்கு துர்நாற்றம் அடிக்கும் அப்போது யாரும் கிட்ட செல்ல முடியாது வயலுக்கு அருகே குடியிருப்பு இருந்தால் சிரமாக இருக்கும் என்றார்.                        அ.காளிதாஸ்