சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் தேடுதல் குழுவில் தமிழ்நாடு அரசு தேர்வு செய்த 3 நபருக்கு மேல் 4 வது நபராக யூஜிசி உறுப்பினரை இணைக்க ஆளுநர் வரம்புகளை மீறுவதை கண்டித்தும் பல்கலைக்கழகத்தில் உடனடியாக துணை வேந்தரை நியமனம் செய்ய வலியுறுத்திஇந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பூபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் சிவ நந்தினி, சிவன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.