மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர், ஆட்டோ சங்க நிர்வாகி கே.சேட்டு சுகந்தி தம்பதியின் மகன் எஸ்.மணிகண்டனுக்கும் என்.சங்கர் ராணி தம்பதியின் மகள் எஸ்.விஜயலட்சுமி திருமண வரவேற்பு விழா அம்பத்தூரில் சனிக்கிழமை (பிப். 10) நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.சுந்தரராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் சு.லெனின் சுந்தர், பகுதிச்செயலாளர் ஆர்,கோபி, சு.பால்சாமி, ரவி, ஆட்டோ சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.ஜெயகோபால், செயல் தலைவர் ஏ.செல்வராஜ், நிர்வாகிகள் ஏ.கோபிநாதன், வி.எஸ்.ராஜேந்திரன், இ.பாலகிருஷ்ணன், சிபிஐ மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மணமகன் மணிகண்டன் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜனிடம் ரூ2 ஆயிரம் கட்சி நிதி வழங்கினார்.