districts

img

செஸ் ஒலிம்பியாட்; வீரர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு

மாமல்லபுரம்,ஜூலை1-  மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி சூலேரிக்காடு பகுதியில் சென்னை குடிநீர் வாரியத்தின் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் 11கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது அதன் அருகில் கூடுதலாக 15 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்திக்காக புதிய ஆலை ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாமல்ல புரத்தில் வருகிற 28 ஆம் தேதி முதல், ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பி யாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 188 சர்வதேச நாடுகளில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் வர உள்ளனர். அவர்கள் தங்குவற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வீரர்கள் தங்க உள்ள 38 ஓட்டல்களில் சமையல், குளியல் மற்றும் அன்றாட தேவைகளுக்கு கல்பாக்கம் அடுத்த வாயலூரில் உள்ள பாலாற்றில் இருந்து நீர் வழங்க முதலில் முடிவு செய்யப்பட்டது. பின்னர் நீரின் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் குறித்து ஆராய்ந்து இந்த திட்டம் அதிகாரிகளால் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் இருந்து நீர் வழங்க முடிவு செய்யப்  பட்டு உள்ளது. இதற்காக சுத்திகரிப்பு ஆலையில் உள்ள பழைய பர்னல்கள் மற்றும் துரு பிடித்த கடல்வழி நீர் குழாய்கள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டு வருகிறது. மேலும் லாரிகளில் நீர் பிடிக்க வசதியாக உயர மான குழாய்களை கிழக்கு கடற்கரை சாலையோரம் சென்னை குடிநீர் வாரியம் புதிதாக அமைத்து வரு கிறது.

தரமான உணவு
இதற்கிடையே வெளி நாட்டு வீரர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள 38 ஓட்டல்களில் பணிசெய்யும் சமையல் கலைஞர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை பயிற்சி அளித்து உள்ளது. மேலும் கொரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்க ளுக்கு தகுதி சான்றிதழ் மற்றும் "செஸ் ஒலிம்பி யாட்" வீரர்கள் தங்கும் ஓட்டல்களின் முழு விபரம் அடங்கிய "கியூஆர் கோடு" சான்றிதழ்களை உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வினா வழங்கினார். அப்போது அவர் கூறும் போது, உணவு வகைகளை குறிப்பிட்ட மணிநேரத்திற்கு மேல் பிரீசரில் வைத்து பின்னர் சமைத்து கொடுக்க கூடாது. காலை, மதியம், இரவு உணவுகளை உணவுத் துறை அதிகாரிகள் வந்து பரிசோதனை செய்த பின்னரே வழங்க வேண்டும் என்றார்.