districts

img

பொங்கல் விழா

பொங்கலையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி சார்பில் முத்தையா முதலி தெருவில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. முன்னதாக, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. இந்த நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம், மாவட்ட குழு உறுப்பினர் எம்.பழனி, பகுதிச் செயலாளர் கவிதா கஜேந்திரன், மாதர் சங்க நிர்வாகி ஆர்.உஷா ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பெரம்பூர் பகுதி 37 வட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா பகுதிச் செயலாளர் பிரமிளா தலைமையில் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் மதுராந்தகம் ஒன்றியம், வள்ளுவப்பாக்கம் கிளை சார்பில் 9ஆவது ஆண்டாக சமத்துவ பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைச் செயலாளர் அஜித் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாதர் சங்க கிளைச் செயலாளர் பூங்கொடி உள்ளிட்டோர் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

பொங்கல் பண்டிகையையொட்டி, தாம்பரம் பகுதி, செம்பாக்கத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் சமத்துவப் பொங்கல் வைக்கப்பட்டது. இதனையொட்டி கோலப்போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் சரஸ்வதி, கிருத்திகா (மாதர் சங்கம்), காண்டீபன் (வாலிபர் சங்கம்), புகழ்ச்செல்வி (மாணவர் சங்கம்) உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சித்தாமூர் ஒன்றியம், இந்தலூர் கிளையின் சார்பில் 11ஆவது ஆண்டாக சமத்துவ பொங்கல் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. செய்யூர் வட்டத் தலைவர் இ.கோகுலவிளக்கு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.புருஷோத்தமன், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு கிராமத்தில் 38ஆவது ஆண்டாக பொங்கல் விளையாட்டு விழா - பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.மதன், திரைக்கலைஞர் சாய் தீனா, ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.வி.எல்லையன், துணைத் தலைவர் n ஜனார்த்தனன், ஒன்றிய கவுன்சிலர் மொழியரசி செல்வம், தொழில் அதிபர் முத்துகுமார், காவல்துறை ஆய்வாளர் ரஜினிகாந்த், வாலிபர் சங்க சோழவரம் ஒன்றியச் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.