சென்னை, டிச.9- சென்னை ஃபோட்டோ பயன்னலேயின் (புகைப்பட கண்காட்சி) மூன்றாவது பதிப்பு வியாழனன்று (டிச.9) தொடங்கியது. அடுத்தமாதம் 6 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியையொட்டி டிஜிட்டல் கண்காட்சிகள், நேரடிக் கண்காட்சிகள், இணைய இதழ்கள், பயன்னலே வெளியீடுகள், கலைஞர்களின் உரைகள், புகைப்பட விருதுகள், மாண வர்களுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. சென்னையில் இந்த கண்காட்சியை மாநில சுற்று லாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். “அமைதியின்மை யின் வரைபடம்” எனப் பெயரி டப்பட்டுள்ள இந்த கண்காட்சி பன்முகத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் பெரும் பான்மைவாதத் திணிப்பு, சூழலியல் சீரழிவு ஆகியவை குறித்து புதிய சிந்தனையை எழுப்பும் வகையிலும் அமைந்துள்ளது. இந்த கண்காட்சி நேரடி யாகவும் டிஜிட்டல் வடிவங்க ளிலும் நடத்தப்படுகிறது. ஃபோரம் ஆர்ட் கேலரி, அஷ்விதாஸ் கேலரி, ரோஜா முத்தையா ஆரய்ச்சி நூல கம், சென்னை இலக்கியச் சங்கம், கோதே இன்ஸ்டி டியூட் ஆகிய இடங்களில் வீடி யோ திரையிடல்கள், நேரடிக் கண்காட்சிகள் நடைபெறும். பங்கேற்கும் கலைஞர்கள் அமிதேஷ் குரோ வர், அனாஸ் டோண்டூர், ஆன்ட்ரியாஸ் லாங்ஃபீல்ட்-சரபி ரவிச்சந்திரன், ஆர்தர் கிரெஸ்டானி, பாபு ஈஸ்வர் பிரசாத், கரோலினா கேசி டோ, கௌரி கில், ஹரூன், பார்வதி நாயர்-நயன்தாரா நாயர், சரண்ராஜ், செந்தில் குமரன், சிவா சாய் ஜீவா னந்தம், சௌமியா சங்கர் போஸ், ஸ்ரீதர் பாலசுப்ரமணி யம் உள்ளிட்ட கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.