சென்னை, நவ. 1- சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் தெரிவிக்க மாநகராட்சி நிர்வாகம் உதவி எண்களை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இதை யடுத்து பல்வேறு மாவட்டங் களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் திங்களன்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசை வாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக் கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், திருவொற்றி யூர், மணலி, மாதவரம், ஆர்.கே நகர், பெரம்பூர், திருவிக நகர், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், திருவான்மி யூர் உட்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது. இதனால் சாலை முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மழை நீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள் ளது. இலவச உதவி எண் 1913 மூலம் தொடர்பு கொள் ளலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. மேலும், 044-25619206, 044-25619207, 044-25619208 ஆகிய எண்கள் அறிவிக்கப் பட்டுள்ளது. அதேபோல், நம்ம சென்னை செயலி அல்லது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மூலமாக வும் உதவியை நாடலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.