சென்னை மாநகராட்சி 41ஆவது வார்டு அலுவலகத்தை ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.எபிநேசர் திறந்து வைத்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் பா.விமலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.லோகநாதன், ஏ.விஜயகுமார், வி.ரவிக்குமார், பகுதிக்குழு உறுப்பினர் ஏ.விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.