districts

சென்னை முக்கிய செய்திகள்

இலவச வேலைவாய்ப்பு பயிற்சி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை, ஜூலை 12- சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி, கிண்டி (மகளிர்), திருவான்மியூர், வடசென்னை மற்றும் ஆர்.கே. நகர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும், ஆண்களுக்கு வயது உச்ச வரம்பு 40, பெண்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. பயிற்சி காலத்தில் சலுகைகள் கட்டணமில்லா பயிற்சி, உதவித்தொகை மாதந்தோறும் ரூ.750, பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, மடிக்கணினி, பாடப்புத்தகம், சைக்கிள், காலணி  ஆகியவை வழங்கப்படும். பயிற்சியின் போது வேலைவாய்ப்பு  பயிற்சி மற்றும் உள் பயிற்சி மூலம் தொழிற்சாலைகளில் பயிற்சி  அளிக்கப்படும். பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்பு. ஆன் லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.7.2021, விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in தொடர்புக்கு 044 - 22501350, 94990 55649. மேலும், அருகாமை யில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயல்படும்  சேர்க்கை உதவி மையத்தை அணுகியும் விண்ணப்பிக்கலாம்  என சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயாராணி தெரி வித்துள்ளார்.

கள்ள நோட்டு கொடுத்து மதுபானம் வாங்கியவர் கைது

சென்னை, ஜூலை 12- திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக் கடையில் ஞாயிற்றுக்கிழமை ஒருவர் 4 நூறு ரூபாய் நோட்டுகளை கொடுத்து மது வாங்கினார். அந்த  ரூபாய் நோட்டுகளை வாங்கிய கடையின் விற்பனையாளர் ராமருக்கு, அது கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து ராமர், அந்த நபரை கையும் களவுமாக  பிடித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்து, புகார் அளித்தார். நூறு ரூபாய் கள்ளநோட்டுகளையும் காவல்  நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் துறையினர் அந்த நபரிடம்  நடத்திய விசாரணையில், அவர் வேலூர் மாவட்டம் திருப்பத்  தூர் தர்கா தெருவைச் சேர்ந்த அ.அப்துல் ரஷீத் (54) என்பதும்,  திருவல்லிக்கேணி சிஎன்கே சாலையில் உள்ள ஒரு விடுதி யில் தங்கியிருந்து கைத்தறி வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அப்துல் ரஷீத்தை கைது செய்து, எப்படி கள்ள நோட்டு  அவருக்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை, ஜூலை 12- ஆவடியில் உள்ள விமானப்படை வளாகத்தில் வீரர் ஒரு வர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான விமானப்  படை வளாகம் ஆவடியில் உள்ளது. இங்கு உத்தரப்பிர தேசத்தை சேர்ந்த ஆகாஷ் விசுவகர்மா என்பவர் பணியாற்றி  வந்தார். வழக்கம்போல் இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தார். அப்போது, திடீரென அவர் இருந்த பகுதியில் இருந்து  துப்பாக்கி சத்தம் கேட்டது. இதையடுத்து வளாகத்தின் மற்ற  பகுதியில் இருந்த வீரர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஆகாஷ் விசுவகர்மா தலையில் குண்டு பாய்ந்து  இறந்து கிடந்தார். அவர் தனது கையில் வைத்திருந்த இன்சாட்  வகை துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது.  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரசைவாக்கத்தில் பெண்ணிடம் பை பறிப்பு

சென்னை, ஜூலை 12- சென்னை கொசப்பேட்டையை சேர்ந்தவர் வாணி. புரசை வாக்கம் டாணா தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் வேலை செய்து வருகிறார். திங்களன்று காலை 5.30 மணிக்கு  சூளை வழியாக ஆட்டோவில் வேலைக்கு சென்று கொண்டு  இருந்தார். குறவன்குளம் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கி ளில் வந்த வாலிபர் ஒருவர் வாணி கையில் வைத்திருந்த பையை பறித்து சென்று விட்டார். அதில் 2 பவுன் நகை இருந்தது. இது பற்றி வேப்பேரி காவல்துறையினர் விசா ரணை நடத்த வருகின்றனர்.

7 டன் ரேசன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது

கடலூர், ஜூலை 12- கடலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தியதாக 2 பேரை  காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். திட்டக்குடி பகுதியிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவ தாக கடலூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவின ருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்படி ஆய்வாளர் கல்பனா, தலைமையில் காவல் துறையினர் ஞாயிறன்று திட்டக்குடி அருகில் உள்ள கொரக்கவாடி பகுதியில் கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்  பட்டிருந்த வாகனத்தை சோதனையிட்டனர். அதில், 102 மூட்டைகளில் தலா 70 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய  வந்தது. இதையடுத்து 7,140 கிலொ ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அதேப் பகுதியைச் சேர்ந்த கருப்பையா (25), பன்னீர்செல்வம் (28)  ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசா ரணையில், சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு அரசால் இலவசமாக வழங்கப்படும் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை அதிக விலைக்கு சேலம், நாமக்கல் பகுதிகளில் கோழி தீவனமாக விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர். இதுகுறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.