districts

சென்னை முக்கிய செய்திகள்

பொன்னேரி அருகே பச்சை பயிர் சாகுபடி முறை பயிற்சி

பொன்னேரி, பிப்.20 - பொன்னேரி அடுத்த வைரவன் குப்பம் கிராமத்தில் சம்பா நெல் சாகுபடிக்கு பிறகு நிலத்தை  தரிசு நிலமாக விடாமல் அதில் தெளிப்புநீர் முறையை பயன்படுத்தி நிலத்தின் ஈர  பதத்தில் பச்சை பயிர் சாகுபடி செய்வது தொடர்பாக  விவசாயிகளிடையே நேரிடையாக பயிற்சி அளிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட விவசாயத் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாயத் துறை துணை இயக்குனர் எபினேசர், பொன்னேரி ஆர்.டி. ஓ.செல்வம் ஆகியோர் வைரவன் குப்பத்தில் உள்ள தரிசு நிலத்தில் பச்சைப் பயிர் சாகுபடியினை தொடங்கி வைத்தனர். வைரவன் குப்பம் கிராமத்தில் இம்முறையை பயன்படுத்தி 150 ஏக்கருக்கும் மேலான நிலங்க ளில் விவசாயிகள் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள னர்.  இதில் சோழவரம் ஒன்றிய வேளாண்மை அலுவலர் ஸ்ரீதேவி, உதவி வேளாண்மை அலுவ லர் ஜாய்ஸிமணி ரமேஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் கலந்து கொண்டனர்.  


வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலில்  அதிகம் வாக்களித்த பெண்கள்

வேலூர், பிப். 20 - வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்கள்  அதிகளவில் வாக்களித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. வேலூர் மாநகராட்சி தேர்தலில் 65.50 விழுக்காடு வாக்குகள் பதிவானது. குடியாத்தம் நகராட்சியில் 67.35 விழுக்காடு, பேரணாம்பட்டு நகராட்சியில் 63.62 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஒடுகத்தூர் பேரூராட்சியில் 78.78 விழுக்காடு, பள்ளிகொண்டா பேரூராட்சியில் 77.76 விழுக்காடு, பென்னாத்தூர் பேரூராட்சியில் 81.65 விழுக்காடு, திருவலம் பேரூராட்சியில் 80.7 சதவீதம் வாக்குகள் பதிவானது. மொத்தமாக 66.68 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது. மொத்தமாக ஒரு மாநகராட்சி 2 நகராட்சி 4 பேரூராட்சிகளில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 156 ஆண்கள், 3 லட்சத்து 162 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 72 பேர் உள்பட  5 லட்சத்து 78 ஆயிரத்து 390 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 883 ஆண்கள், 1லட்சத்து 97 ஆயிரத்து  780 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 11 பேர் உள்பட 3 லட்சத்து 85 ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர். இதில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களித் துள்ளனர். இதனால் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை பெண்கள் தான் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். 


சென்னையில் வங்க தேச முதியவர் கைது

சென்னை, பிப்.20 - துபாய் செல்ல சென்னை விமான நிலை யத்திற்கு வந்த வங்காள தேச முதியவரை குடியு ரிமை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை அதிகாலை துபாய்க்கு செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ரிஸ்வான் கான் (வயது57) என்பவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்யும் போது அவர்  மீது சந்தேகம் அடைந்த  அதிகாரிகள் பாஸ்போர் ட்டை கணினியில் ஆய்வு செய்த போது, அது போலி யான பாஸ்போர்ட் என்று தெரியவந்தது. அவர் வங்காள தேசத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  இந்தியாவிற்குள் மேற்கு வங்க மாநிலம் வழியாக வந்து, திரிபுரா மாநிலம் சென்று அங்கு சில ஏஜெண்டு களிடம் போலியான ஆவண ங்கள் மூலம் அகர்தலா முக வரியில் இந்திய பாஸ்போர்ட் பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து குடி யுரிமை அதிகாரிகள் வங்காள தேசத்தை சேர்ந்த ரிஸ்வான் கானை கைது செய்தனர்.