districts

சென்னை விரைவான செய்தி

பலவகை வட்டி விகிதங்களில்  அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்

சென்னை, செப். 16- இந்திய அஞ்சல் துறை கிராமப்புறங்களில் உள்ள வைப்புத் தொகையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களை அளிக்கிறது. அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு உட்பட இந்த  திட்டங்கள் நிலையான வட்டி விகிதங்களைக் கொண்டுள் ளன. மேலும், நம்பகமான முதலீட்டு திட்டத்தையும் அளிக்கின்றன. வட்டி விகிதங்கள் அவ்வப்போது சரி செய்யப்படுவதால், வைப்பாளர்கள் தங்கள் முதலீடுகளில் கவர்ச்சிகரமான வருமானத்தை எதிர்பார்க்கலாம். அஞ்சலக சேமிப்புக் கணக்கு உங்கள் முதலீட்டின் காலத்தின் அடிப்படையில் பலவிதமான வட்டி விகிதங்களை  அளிக்கிறது. ஒரு வருட முதலீட்டிற்கு 6.9 விழுக்காடு வட்டியை யும், இரண்டு மற்றும் மூன்று வருட முதலீடுகளுக்கு 7 விழுக்காடு வட்டியும் கிடைக்கும். 5 ஆண்டு முதலீட்டைத் தேர்ந்தெடுத்தால் சுமார் 7.5 விழுக்காடு வட்டி கிடைக்கும். குறைந்தபட்ச வைப்புத் தொகையாக 500 ரூபாயுடன் சேமிப்புப் பயணத்தைத் தொடங்கலாம். இந்த திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு 10,000 ரூபாய். 8.2 விழுக்காடு  வட்டி விகிதத்துடன் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் 7.4 விழுக்காடு வரை வட்டி வழங்கும் மாதாந்திர வருமான கணக்குத் திட்டம் போன்ற பிற சேமிப்பு திட்டங்களும் உள்ளன. திட்டம் தொடங்குவதற்கு ஆதார் அட்டை, பான் கார்டு,  மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தொடர்பு  விவரங்கள் தேவை. அருகில் உள்ள அஞ்சல் நிலையத்திற்குச்  சென்று, தேவையான படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க வும். இந்திய அஞ்சல் துறையின் சேமிப்பு திட்டங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கும், உத்தரவாத மான வருமானத்தைப் பெறுவதற்கும், பாதுகாப்பான திட்டங்கள் ஆகும்.


கலைஞர் உரிமைத்தொகை  ஓடிபி எண்ணை பகிராதீர்

விழுப்புரம்,செப்.16- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்  தொடங்கப்படு, செப்.15-ந்தேதி முதல் ரூ.1000 வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. உரிமைத் தொகையினை வங்கியிலிருந்து எடுப்பதற்கு உரிமைத் தொகை ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட உள்ளது.  இந்நிலையில் ஒரு சில மகளிருக்கு வரப்பெற்ற குறுஞ்செய்தியினைத் தொடர்ந்து ஓ.டி.பி. எண் கேட்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது. இத்திட்டத்தில் பயனடைவதற்கு ஓ.டி.பி. எண் ஏதும் நடை முறையில் இல்லை.இத்திட்டத்தின் கீழ் ஏ.டி.எம். கார்டு மூலமாகவோ அல்லது வங்கியில் நேரடியாக சென்று தொகையினை எடுத்துக்கொள்ளலாம்.  மேலும் ஓ.டி.பி. எண் பகிர எவரேனும் தொலை பேசியில் கேட்கப்பட்டால் அவரது கைபேசி எண்ணை மாவட்ட  ஆட்சியர் அலு வலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146-223265 மற்றும் மாவட்ட காவல்  கட்டுப்பாட்டு அறை எண் 04146-222172 ஆகிய தொலைபேசி  எண்களில் புகார் தெரிவிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கானா பாடல் அபிஷேக் கொலை குற்றவாளி கைது

விழுப்புரம், செப்.16- திருவள்ளூர் மாவட்டம், பாடிய  நல்லூர் அண்ணா நகரை சேர்ந்த கந்தன்  மகன் அபிஷேக் (வயது 23). சென்னை யில் உள்ள தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கானா பாடல்  பாடுவதில் அபிஷேக் பிரபலமானவர். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்  22-ந் தேதி அபிஷேக் உறவினர்க ளுடன் கிழக்கு கடற்கரை சாலை வழி யாக வேளாங்கண்ணிக்கு பாத யாத்தி ரையாக சென்றார். அப்போது விழுப்பு ரம் மாவட்டம், மரக்காணம் அருகே கைப்பாணி என்ற இடத்தில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம  கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக மரக்கா ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  கொலையாளிகளான அருண், பிரபா கரன், வைரமணி, விஜய், சஞ்சய், சேதுராமன் உள்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி யான சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த மோகன் (27) என்பவர் தலை மறைவாக இருந்து வந்தார். அவரை  போலீசார் தேடி வந்தனர்.இந்தநிலை யில் அவர், சென்னை பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கொலை வழக்கில் அரக்கோணம் நீதிமன்றத்தில் சரண டைந்து, அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அபிஷேக் கொலை வழக்கை விசாரித்து வந்த மரக்காணம் போலீ சார் மோகனை நீதிமன்ற அனுமதி யுடன் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோஷ்டி மோதலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கூட்டாளிகளுடன் சேர்ந்து அபிஷேக்கை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.


இலவச தொழிற்பயிற்சி

விழுப்புரம், செப்.16- விழுப்புரம் வழுதரெட்டி யில் உள்ள இ.எஸ். தொழில் நுட்ப கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம் பாட்டு கழகத்தால் அங்கி கரிக்கப்பட்ட வேலை வாய்ப்புடன் கூடிய 3 மாத கால இலவச பயிற்சி அளிக் கப்படுகிறது. இந்த பயிற்சி யில் சேர்ந்து படிக்கும் அனைவரும் வேலை வாய்ப்புபெறலாம் என்று கல்லூரி தெரிவித்துள்ளது. இது குறித்து கல்லூரி அலுவலக செய்தி குறிப்பில் இ.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத் தின் 3- மாத இலவச முழு மையான பயிற்சி முடித்த  மாணவர்களுக்கு தமிழக  அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டு, வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும். இதில் இருச்சக்கர வாகனம் பழுது பார்த்தல், உதவி எலெக்ட்ரீசியன் பணி களுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. இதற்கு10-ம்  வகுப்பு மற்றும் அதற்கு  மேல் படித்த 18 வயதுக்கு  மேல் 45 வயதுக்குள் உள்ள வர்கள் இந்த இலவச வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.