districts

    சென்னை, தலைமை செயலக காலனி பெண் காவலர் தற்கொலை

போரூர், ஜூலை 24-

    சென்னை, தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரி வில் காவலராக பணிபுரிந்து வந்தவர் சுகந்தி (வயது25).  

    இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் செம்மார் கிராமம் ஆகும். கடந்த 2017-ம்ஆண்டு காவல்  துறையில் பணிக்கு சேர்ந்த இவர் கோயம்பேடு சேமாத் தம்மன் நகர் பகுதியில் உள்ள  வீட்டில் தனது சகோதரர் சுப்புராயனுடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை மதியம் பணி முடிந்து வீட்டுக்கு வந்த அவர் திடீ ரென சமையலறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.