பொன்னமராவதி, பிப்.23 - பொன்னமாராவதி அருகே கண்டியாநத்தம் கிராமத்தில் சிறுதானிய உணவு போட்டி மற்றும் உணவுத் திருவிழா நடந்தது. கண்டியாநத்தம் ஊராட்சி மகளிர் குழுக் கூட்ட மைப்பு சார்பில் மகளிர் குழு பெண்களுக்கு மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் சிறுதானிய உணவு தயாரித்து அதில் சிறந்ததை தேர்வு செய்யும் போட்டி நடத்தப்பட்டது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுபத்ரா, ஆசிரியர் கீதா, அங்கன்வாடி பணியாளர் ராசாத்தி ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறுதானியம் மூலம் தயாரிக் கப்பட்டவர்களிடம் உணவு மகிமை அதன் பயன்கள் குறித்தும் விளக்கம் பெற்றனர். இதனைத் தொடர்ந்து சிறந்த சிறு தானிய உணவு தயாரித்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஊராட்சித் தலைவர் செல்வி, ஆசிரியர்கள் சத்யா, கலைவாணி, ஊராட்சி செயலாளர் அழகப்பன், குழு கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.