districts

img

புதுச்சேரியில் கருப்பு கொடியுடன் மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, செப்.23- ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சிஐடியு  உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங் கள் சார்பில் புதுச்சேரியில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசு 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி கார்ப்ப ரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக   தொழி லாளர்கள் போராடி பெற்ற 44 தொழிலாளர் நலச்சட்டங்களை,நான்கு தொகுப்புகளாக திருத்தம் செய்ததை கண்டிக்கும் வகை யில், நாடு தழுவிய அளவில் திங்களன்று போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மறைமலை அடிகள் சாலை யில் உள்ள சுதேசி பஞ்சாலை எதிரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  சிஐடியு  மாநிலச் செயலாளர் சீனிவாசன், ஏஐடி யுசி  மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம், ஐஎன்டியூசி  மாநிலச் செய லாளர் ஞானசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.  ஏஐசிசிடியு  மாநிலச் செயலாளர் புரு ஷோத்தமன், எல்எல்எப் சங்க செயலாளர் செந்தில்,எம்எல்எப் செயலாளர் வேதா வேணுகோபால் உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்களின் நிர்வாகிகள் பிரபுராஜ், ராமசாமி, கொளஞ்சியப்பன், மதி வாணன்,வடிவேலு, சிவக்குமார்,  மகேந்திரன்,அபிஷேகம், தினேஷ் பொன்னையா, சந்திரசேகரன், தயாளன், முருகன், நரசிங்கம், தமிழ்ச் செல்வம்,அருள் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் உரையாற்றினர். முன்னதாக, கருப்பு கொடி யுடன் ஊர்வலமாக வந்த தொழிலாளர்கள் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.