districts

img

மின்சார வாரியத்தில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்

ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துவதை திரும்ப பெறக் கோரியும் மின்சார வாரியத்தில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு  சார்பில் மண்டல அளவிலான தர்ணா போராட்டம் காட்பாடி தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு மாநிலத் துணைத்தலைவர் எஸ்.ஜோதி தலைமையில் நடைபெற்றது.  சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன், மண்டல செயலாளர் எம்.கோவிந்தராஜ், மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.  வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி திட்டக்கிளை செயலாளர்கள் டி.ஜெகன், சந்திரசேகரன், கருணாநிதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். வேலூர் திட்டக்கிளை பொருளாளர் சின்னதுரை நன்றி கூறினார்.