புதுச்சேரி,ஆக.16- நாட்டின் 78வது சுதந்திர தினவிழாவையொட்டி புதுவை அரசு சார்பில் கடற்கரை சாலையில் கொண்டாடபட்டது. வண்ண மிகு அலங்கரிக்கப்பட்டி ருந்த கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே தேசிய கொடியை முதல்வர் ரங்க சாமி ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதையை பார்வை யிட்டார். பின்னர் சுதந்திர தின உரையாற்றினார். தொடர்ந்து சிறப்பாக பணி யாற்றிய போலீசாருக்கு பதக்கங்களை வழங்கினார். சிறந்த காவல் நிலையத் திற்கு விருது வழங்கினார். தொடர்ந்து காவல் துறை யின் பல்வேறு படைப்பிரிவி னர், முன்னாள் ராணுவ வீரர் கள், என்எஸ்எஸ், என்சிசி, சாரண, சாரணியர், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், பல்வேறு மாநில கலைக்குழுவினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் வண் ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவண குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, செல்வகணபதி எம்பி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்எல் ஏக்கள் மற்றும் தலைமை செயலாளர் சரத் சௌகான், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தியாகிகளின் வாரிசுகள் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை யில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இதேப்போல் காரைக்கால் மாவட்டத்தில் அமைச்சர் திருமுருகன், ஏனாமில் அமைச்சர் லட்சுமி நாராயணன், மாஹேவில் அமைச்சர் தேனீெஜயக் குமார் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றினார்கள்.