காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட பரணிபுத்தூரில் உலக மகளிர் தினத்தையோட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. மாதர் சங்கத்தின் மூத்த தோழர் டி.பிரேமா, ஊராட்சி மன்றத் தலைவர் கௌரி தாமோதரன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.