districts

img

ரமலான் பண்டிகை: வாலிபர் சங்கம், தமுஎகச இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மதுராந்தகம், ஏப். 23- ரமலான் பண்டிகையை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமுஎகச சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இஸ்லாமியர்களின் பண்டிகையான ரமலான்  தினத்தன்று (ஏப்.22) மதுராந் தகம் புறவழிச்சாலையில் உள்ள மசூதியில் தொழுகை முடிந்து வந்தவர்களுக்கு இனிப்பு, குடிதண்ணீர், வாழ்த்து மடல் வழங்கி ஈகைத்திருநாள் வாழ்த்துக் களை தெரிவித்தனர். தமுஎகச  மதுராந்தகம் கிளை செயலாளர் அறிவர சன் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் இ.சங்கர தாஸ், செயலாளர் கவி சேகர்,  நிர்வாகிகள் கவிஞர்கள் ராஜபாரதி, மதுகை சுதா,  இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் மு.பிரியங்கா, ஒன்றிய நிர்வாகிகள் செந்தமிழன், அசோக், ஆசாத், சிஐடியு ஆட்டோ  ஓட்டுநர்கள் சங்க நிர்வாகி கள் ரமேஷ், இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.