சென்னை, ஜன. 7 - சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் வகையில், புகையில்லா போகி கொண்டாட சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. பொங்கலுக்கு முந்தை நாளான ஜன.14ந் தேதி போகி பண்டிகை கொண் டாடப்படுகிறது. அப்போது மக்கள் பயன்படுத்திய பழைய பொருட்கள், துணி உள்ளிட்டவைகளை எரிக்கின்றனர். ஒருசிலர் ஜன,13ந் தேதி இரவு முதலே எரிக்க தொடங்கி விடு கின்றனர். இதனால் கடுமை யான சுற்றுச்சூழல் மாசு பாடு ஏற்படுகிறது. பொருட்கள் எரிப்பதால் உருவாகும் புகையால் கண் எரிச்சல், சுவாச கோளாறு போன்ற உடல் உபாதை கள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகள் விபத்துக் குள்ளாகிற அபாயம் உள்ளது, இவற்றை யெல்லாம் தடுக்கும் வகையில், மாநகராட்சிக் குட்பட்ட 15 மண்டலங்களி லும் உள்ள மக்களிடமிருந்து, பயன்பாட்டில் இல்லாத துணி, டயர், ரப்பர் ட்யூப், பிளாஸ்டிக் பை போன்ற வற்றை சேகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதன்படி, தூய்மை பணியாளர்களிடம் ஜன.8ந் தேதி முதல் 14ந் தேதி வரை வழங்குமாறு பொதுமக்கள் வழங்குமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சி தாம்பரம் மாநகராட் சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பொருட் களை சேகரிப்பதற்கு என்று இடம் தேர்வு செய்துள்ள னர். ஆகவே, பழைய பொருட்களை பொது மக்கள் எரிப்பதை தவிர்க்க வும், அவற்றை தூய்மை பணியாளர்களிடம் வழங் கவும் தாம்பரம் மாநக ராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.