சிதம்பரம், நவ.8- சாதிய ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தெரிவித்தார். சிதம்பரத்தில் காங்கி ரஸ் கட்சி சார்பில், சாதி வாரி கணக்கெடுப்பின் அவ சியமும், முக்கியத்து வம் என்ற தலைப்பில் கருத் தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கே. பாலகிருஷ்ணன் பேசுகை யில், “ நாட்டில் 10 ஆண்டு களுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பணி யோடு சாதிவாரி கணக் கெடுப்பு நடத்தினால் பழங்குடி மற்றும் பட்டி யலின மற்றும் பிற்பட்டவர்க ளுக்கு இட ஒதுக்கீடு சத வீதத்தை அதிகரிக்க வழங்க வேண்டும் என்பதால் பாஜக மறுத்து வருகிறது. சாதிய ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை சாதி வாரிய கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்”என்றார். ஆர்எஸ்எஸ் எதிர்ப்பது ஏன்? திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசுகையில்,“ நாட்டில் தற்போது மனித நேயத்திற்கும் மநு தர்மத்திற்கும் போட்டி நடந்து வருகிறது. இந்த நிலையில்தான், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று ஆர்எஸ் எஸ் கூறுவதில் ஒரு நோக்கம் உள்ளது. கணக் கெடுப்பு நடத்தினால் துல்லியமான இட ஒதுக்கீடு கிடைத்து விடும் என்பதாகும்”என்றார். கருத்தரங்கிற்கு தலை மை தாங்கிய பேசிய காங்கி ரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே. எஸ் அழகிரி,“ நாட்டில் இதர பிற்பட்ட பிரிவி னர் 60 விழுக்காடு உள்ள னர். ஆனால் 27 விழுக்காடு மட்டுமேஇடஒதுக்கீடு கிடைக்கிறது. எனவேதான் சாதி வாரியாக கணக் கெடுப்பு நடத்தினால் அவர் கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கிடைக்கும். அதனால்தான் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வருகி றோம்”என்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ, காங். மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், மாநில செயலாளர் சித்தார்த்தன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநிலத் துணைத் தலைவர் மூசா, ராஜா, விசிக மாவட்டச் செயலாளர் அரங்க தமிழ்ஒளி, திரா விடர் கழக மாவட்ட செய லாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.