திருவண்ணாமலை, ஜன.24- திருவண்ணாமலை மாவட்டம், தண்ட ராம்பட்டு தாலுகா கீழ்ராவந்தவாடி கிரா மத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, பட்டியலினத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் தனிப்பட்ட முறையில் வாய் தகராறு ஏற் பட்டுள்ளது. இந்த தகராறு முற்றிய நிலை யில், பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பலர் ஒன்று சேர்ந்து, பொதுவாக சிறு பாலம் (கல்வெட்டு) சுவரை உடைத்து அட்டூழியத் தில் ஈடுபட்ட னர். காரணம், பட்டியலினத்தை சேர்ந்தவர்களும் இந்த கட்டைச் சுவரில் வந்து உட்காருந்துவிடுகிறார்கள். இனி அந்த சாதியை சேர்ந்த யாரும் எங்கள் முன்பு அமரக்கூடாது என்று மிரட்டல் விடுத் துள்ளனர். இந்நிலையில், கிராமத்திற்கு பொது வான கல்வெட்டு கட்டை சுவரை சாதிப் பெயரைச் சொல்லி இடித்து சேதப்படுத்தி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சுவரை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று கீழ்ராவந்த வாடி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தண்ட ராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆர்.அண்ணாமலை, சிஐடியு நிர்வாகி ஆர். ரவி ஆகியோர் உடனி ருந்தனர்.