வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
இச்சம்பவம் குறித்து மாநிலக் குழு உறுப்பினர் டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது கோட்டையூர் கொடூர சாதி வன்கொடுமை தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். தாக்குதலில் பாதிக்கப்பட்ட தலித் சமூகத்தினருக்கு அரசு ஒரு ஏக்கர் நிலம் விதம் வழங்க வேண்டும், 30 ஆண்டுகளுக்கு முன்பு தலித் மக்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு அறிவித்த 1.76 ஏக்கர் நிலத்திற்கான பட்டாவை ஒப்படைவு செய்து உடனடியாக தொகுப்பு வீடுகளை கட்டித்தர வேண்டும், கடந்த ஆண்டு உகாதி பண்டிகை முதல் தற்போது மாரியம்மன் கோவில் திருவிழாவிலும் காவல்துறையினர் முன்பே நடைபெற்ற சாதிய வன்கொடுமை தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருந்து அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தாக்குதலுக்கு உள்ளான தலித் மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சரியான குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்,முதல் தகவல் அறிக்கையின் படி தலைமறைவாகியுள்ள மோகன் தலைமையில் தாக்குதல் தொடுத்த பேடரள்ளி தொழில் முறை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்,
கோட்டையூர் கிராமத்தில் உள்ள உணவகங்கள் அனைத்திலும் தலித் மக்கள் உள்ளே நுழையவும்,அமர்ந்து உணவு அருந்தவும் அனுமதி மறுக்கப்படுவதற்கும், இரட்டை டம்ளர் முறை பின்பற்றப்படுவதற்கு எதிராகவும்,கோட்டையூர் கோவில் திரு விழாவிற்கு கால காலமாக தலித் மக்களிடம் வரி வசூலிக்காமலும், கோவிலுக்குள் நுழைய விடாமலும் தடுத்து வருவதற்கு எதிராகவும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசும் மாவட்ட ஆட்சியரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த சம்பவம் குறித்து உடனடியாக சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தொடர் கண்டன இயக்கங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி,ஏப்19- அஞ்செட்டி வட்டம், கோட்டை யூர் ஜீன்மநத்தம் கோயில் திரு விழாவில் தலித் மக்கள் மீது சாதி ஆதிக்க சக்திகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் படு காயமடைந்தனர். அஞ்செட்டியிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் மலைக்கு அப்பால் தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் உள்ள வறட்சியான கிராமம் கோட்டையூர். இங்கு 70 தலித் குடும்பங்கள் பிற சமூகங்களை சேர்ந்தவர்கள் உட்பட160 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கோட்டையூரில் கடந்த 13 ஆம் தேதி ஜீன்மநத்தம் மாரியமன் கோயில் திருவிழா நடைபெற்றது. அன்று இரவு மாற்று சமூகத்தைச் சேர்ந்த மோகன்(21) தனது தங்கை யுடன் இருசக்கர வாகனத்தில் ஜீன்மநத்தம் பிரிவு சாலையில் செல்லும் போது எதிரே வந்து கொண்டிருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த மரலிங்கா(38) மீது மோதி யுள்ளார். இது குறித்து இருவருக்கு மிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த சென்ற மோகன் ஆதர வாளர் தேவராஜ் மற்றும் சிலருடன் திரும்பி வந்து மர்லிங்காவை தாக்கியுள்ளனர். இதில் கையில் வெட்டுக் காயமடைந்த மரலிங்கா நியாயம் கேட்க தங்கள் உறவினர்க ளுடன் அடுத்த வீதியில் உள்ள மாற்று சமூகத்தை சேர்ந்த ஊர் கவுண்டர் மகனான மோகன் வீட்டுக்கு சென்றனர்.
அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் தெருவின் மொத்த மின் இணைப்பையும் துண்டித்து மோகன் மற்றும் அவரைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்டோர் அரிவாள்,இரும்பு கம்பி,வெட்டுக்கத்தி கட்டை போன்ற வற்றால் தலித் சமூகத்தினர் மீது கொடூர தாக்குதல் தொடுத்தனர்.
அதில் ரவி(33), அபி(20), மது(25), பசம்மா(28), குமார் (32), சிவம்மா(28), கங்கா தரன் (15), சிபி(27), ஜெயா (26), படுகாயமடைந்த 9 பேர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் 7 பேர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையிலும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். மாணவ மாணவிகளும் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டனர்.
தலித் சமூகத்தை சேர்ந்த மரலிங்கா தரப்பினர் அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்டிப்படையில் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து மோகன்(21), கைலாஷ்(28), சுந்தர மூர்த்தி(24), கிருஷ்ணன்(44), சென்னகுமார்(37), மாதையன்(30) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அதே போல் தேவராஜ் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் கடும் தாக்குதலுக்கு உள்ளான ரவி, வெங்கடாசலபதி, சிவா, குமார், அபி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . கடுமையாக பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த மரலிங்காவை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். தகவல் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் டில்லி பாபு,மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், இருதயராஜ்,சாம்ராஜ், பிரகாஷ்,சுரேஷ் கோவிந்தசாமி, மகா லிங்கம்,மாவட்டக் குழு உறுப்பி னர் லெனின் முருகன் அஞ்செட்டி வட்டச் செயலாளர் தேவ ராஜ், விவசாயிகள் சங்க நிர்வாகி கள் கோவிந்தன் மாரப்பா, காவேரி உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட வர்களை மருத்துவமனைகளிலும் கோட்டையூரிலும் ஆறுதல் கூறி னர். மேலும் கோட்டையூர் தலித் மக்களுக்கு என்று 30 ஆண்டு களுக்கு முன்பு அரசால் அறி விக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு இது வரை ஒப்படைக்கப்படாத 1.76 ஏக்கர் வீட்டு மனைகளையும் பார்வையிட்டனர்.