districts

img

முதியோர் உதவித்தொகை கேட்டு திருவோடு ஏந்தி போராட்டம்

திருவண்ணாமலை, டிச. 10- முதியோர் உதவித்தொகை கேட்டு கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  திருவோடு ஏந்தி போராட்டம் நடைபெற்றது. முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி கள் ஓய்வூதியம் பெற தமிழக அரசு ஆன்லைன் முன்பதிவு செய்ய அறிவித் துள்ளது. அதன்படி பதிவு செய்தாலும், தனி  வட்டாட்சியர் முறைகேடு செய்து, லஞ்சம்  கொடுப்பவர்களுக்கு மட்டும் ஓய்வுதியம் வழங்குவதாக மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. எனவே, ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தகுதியான பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் சுந்தர் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பிரகலா தன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.கே.வெங்கடேசன், சுப்பிரமணி, சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.