ராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் மிகு மின் நிறுவனத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பணிபுரியும் கேண்டீன் ஒப்பந்தத் தொழிலாளர்களை மார்ச் 25 தேதிக்குள் பணி நிரந்தரம் செய்ய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தக் கோரி கடந்த இரண்டு நாட்களாக கேண்டீன் ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு நிரந்தர தொழிலாளர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.