districts

img

மகளிர் சுயஉதவி குழுவினருக்கு புற்றுநோய் பரிசோதனை முகம்

சென்னை, அக்,13- தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள  மகளிர்  சுயஉதவிக் குழுவான, ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி  செயல்திட்டம் (ஐவிடிபி) என்ற அமைப்பின் ஒத்துழைப் போடு மகளிருக்கு புற்றுநோயைக் கண்டறிவதற்கான தொடர்  பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதாக புற்றநோயியல் சிகிச்சைக்கான  கார்கினோஸ் ஹெல்த்கேர்  நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முகாமிற்கு தேவை யான மருத்துவ கட்டமைப்புகளை இந்த நிறுவனம் வழங்கியது.  10 மாதங்கள் காலஅளவில் பல்வேறு முகாம்களில் நடைபெற்ற தொடர்ச்சியான பல முகாம்களில் மார்பக, வாய், தொண்டை மற்றும் கருப்பைவாய் புற்றுநோய்க்காக 6287 பெண்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. தொடக்க நிலையிலேயே புற்றுநோயை கண்டறிவது மிக முக்கியமானது என்பதை இம்மருத்துவ முகாம்கள் வலுவாக கோடிட்டுக் காட்டுகின்றன என்று கார்கினோஸ் ஹெல்த்கேர் – ன் தென் மண்டலத்திற்கான மருத்துவ இயக்குநர் டாக்டர். மாலினி சந்திரசேகரன் கூறினார்.