districts

img

புதுவையில் விற்பனை குழு தேர்தல் ரத்து

புதுச்சேரி,ஜன.9- சாலையோர விற்பனை குழு தேர்தலை ரத்து செய்துள்ள புதுச்சேரி நகராட்சியை கண்டித்து சிஐடியு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி நகராட்சி சார்பில் சாலையோர வியா பாரிகளுக்கான 12 பேர் கொண்ட விற்பனை பிரதிநி திகள் (வெண்டிங் கமிட்டி) தேர்விற்கான தேர்தல் புதன்கிழமை (ஜன. 10) கம்பன் கலையரங்கத்தில் நடைபெறுவதாக இருந்தது.  இத்தேர்தலில் சிஐடியு  புதுச்சேரி மாநில சாலை யோர வியாபாரிகள் சங்கத் தின் சார்பில் 12 பேர் போட்டி யிடுகின்றனர். சிஐடியு சங்கத்தை எதிர்த்து  ஏஐடி யூசி,ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள்  ஒரு அணியாகவும்  போட்டி யிடுகின்றனர்.  இதற்கான பிரச்சாரம் கடந்த 2 வருடங்களாக  நடை பெற்றது. புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கு தயா ராக இருந்தனர். திடீர் ரத்து இந்நிலையில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் திங்கட்கிழமை (ஜன. 8) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “புதுச் சேரி நகராட்சி சார்பில் ஜனவரி 10 இல் நடைபெறு வதாக இருந்த சாலையோர வியாபாரிகள்  நகர விற்பனை குழு உறுப்பினர் தேர்தல் மறு அறிவிப்பு வரும் வரை தள்ளி வைக் கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்த சிஐடியு நிர்வாகிகள்  கம்பன்  கலையரங்கத்தில் உள்ள நகராட்சி ஆணையர் சிவக் குமார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இத் தகவல் அறிந்த காவல்துறை யினர் முற்றுகையில் ஈடுபட்ட சிஐடியு தலை வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது எந்த வித உடன்பாடு ஏற்படாததால் அலுவலகத்திலேயே சிஐடியு சார்பில் தர்ணா போராட்டம் மாலை வரை  நடைபெற்றது. இதே  போல் மற்ற தொழிற்சங்க மும் தேர்தல் ரத்து செய்யப் பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தால் புதுச்சேரி நகராட்சி அலுவலகம் போர்களமாக காட்சி அளித்தது.