districts

img

வாலிபர் சங்கத்தினர் மீதான வழக்கு ரத்து

சென்னை, ஜன. 29 - பணமதிப்பு நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய இந்திய ஜன நாயக வாலி பர் சங்கத்தினர் மீது போடப் பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஒன்றிய அரசு 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நட வடிக்கையை அறிவித்தது. இதனை எதிர்த்து டிச.31 அன்று வாலிபர் சங்கத்தினர் மேடவாக்கத்தில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது காவல்துறையினர் கொடூர தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து அரசு வாகனத்தை (பொதுச் சொத்தை) சேதப்படுத்தி யது, 143, 294(பி), 285, 332 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த னர். இதனையடுத்து முன்னணி ஊழியர்கள் எம்.ஆர். சுரேஷ், எம்.தாமோதரன், திவாகர், தா.கிருஷ்ணா, கார்த்திக், சுபாஷ், ஹனிபா, சந்தீப் ரெட்டி,  ஜெயக்குமார், செல்வ குமார், பாலகிருஷ்ணன், அழகேசன், அனிஷ், ஜெயவேல் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில், ஜெயக்குமார் சட்டக்கல்லூரியில் பயின்ற வர். வழக்கு காரணமாக வழக்கறிஞராக பதிவு செய்து பணியற்ற முடிய வில்லை. எனவே, தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் மீது புனையப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். ஜெயக்குமார் மீது போடப்பட்டது பொய் வழக்கு எனில், இந்த வழக்கில் உள்ள மற்றவர்க ளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அதனையேற்று வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.