புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சுமார் 3.50 லட்சம் பேருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள சுமார் 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர், விருத்தாசலம்,சிதம்பரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.