திருவள்ளுர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாதவரம் -செங்குன்றம் பகுதிக்குழு சார்பில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இதில் பகுதிச் செயலாளர் வி.கமலநாதன், திமுக வட்டச் செயலாளர் எம்.சரவணன், அவைத்தலைவர் கே.பத்மநாபன், 32ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் இ.ஏழுமலை, சிபிஎம் நிர்வாகிகள் வி.சரவணன், ஆர்.தாமோதரன், பி.கார்த்திக், சொர்ணம்மாள், கே.கார்த்திக், கே.மதன், எஸ்.செல்வன், திருமால் நகர் வி.சரவணன், விசிக நிர்வாகி மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.