districts

img

ராயபுரத்தில் வாகன ஓட்டியின் கழுத்தில் சிக்கிய கேபிள் வயர்

சென்னை, மே 9- சென்னை ராயபுரம் கல்மண்டபம் அருகே அசோக் என்ற இளைஞர் வியாழனன்று காலை  இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டி ருந்தார். அப்போது கல் மண்டபம் பிரதான சாலை யின் நடுவே தொங்கிக் கொண்டிருந்த தனியார் இன்டர்நெட் கேபிள் வயரில்  சிக்கி நிலை தடுமாறி அந்த  வழியாக வந்த மாநகர  பேருந்து முன் விழுந்துள் ளார். இதைக்கண்டு சுதாரித்து கொண்ட பேருந்து ஓட்டுநர், சட்டென பேருந்தை நிறுத்தவே, அருகில் இருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டுள்ள னர். இதனால் இளைஞர் நல்வாய்பாக உயிர் தப்பி னார். பின்னர் அங்கிருந்த வர்கள் உதவியோடு போக்கு வரத்து காவல் துறையினர் கேபிள்களை அகற்றினர். தனியார் இணைய சேவை நிறுவனத்தின் கேபிள் வயர் கள் சாலையின் குறுக்கே தொங்கியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக ராயபுரம் காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்ற னர். சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.